
பிரித்தானிய காரை நலன் புரிச்சங்கத்தின் பொங்கல் விழாவான ‘காரைக் கதம்பம் 2025’ கடந்த சனிக்கிழமை மாலை (15.02.2025) மண்டபம் நிறைந்த மக்களுடன் இனிதே நிறைவேறியது.
விழா குறிப்பிடப்பட்டது போல் மாலை 06:௦௦ மணிக்கு ஆரம்பமானது. சங்கத்தின் வரவேற்புரையை தொடர்ந்து சிறுவர் நிகழ்சிகள் ஆரம்பமானது. பரத நாட்டியம், இசைக் கச்சேரி, நாடகம், சினிமா நடனம், பேச்சு என்று பல இனிய நிகழ்வுகளை சிறுவர், சிறுமியர் மேடையேற்றினர்.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வைத்தியர் ஜெகசோதி அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து விழாவில் பங்குபற்றிய சிறார்களும் கௌரவிக்கப்பட்டார்கள்.
சங்கத்தின் விழா பொருளார் திரு தர்சன் இராஜேந்திரன் வழங்கிய நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது. அதன் பின்னர் மக்கள் அனைவரும் இராப்போசன விருந்தில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
நன்றி
நிர்வாகம்
பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கம்
நிகழ்வுகள் காணொளியாக இணைக்கப்பட்டுள்ளது